ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

ஒரு குண்டின் எதிரொலி

சத்தத்தை தந்து குண்டு
சந்தியில் வெடித்த தன்று
மொத்தத்தில் எந்தன் நோஞ்சான்
மேனியில் கீறல் இல்லை

இத்தனை கிட்ட வெடித்தும்
என்னிலே காயம் இல்லை
அப்பனே சாமி முருகா - உந்தன்
அருளது என்ன ஐயா

அருகிலே குண்டின் ஒலியும்
அடங்கவே முன்னர் வந்தோர்
வருக நீ என்று சொல்ல
வழியிலே கூடப் போனேன்

தடியோடு நின்ற அம்மான்
தடுத்துமே உள்ளே போகும்
படி நா அசைத்த போது - அங்கு
பார்ப்பார் என ஐ டி என்று

நினைத்தது தப்பாய் போச்சு
நிகழ்த்து வேறு ஆச்சு
நனைத்து காலை சிறுநீர்
நடந்ததை என்ன சொல்வேன் ?

அப்பாவும் அடித்ததில்லை -என்னை
அம்மாவும் உறுக்க வில்லை
தப்புகள் செய்தும் வாத்தி
தண்டனை தந்தது இல்லை

இருபது வயது வந்தும்
எவருமே அடிக்கா குறையை
தவிரவே செய்வம் என்று
தந்தனர் நல்ல பூசை

எங்கேனும் குண்டு வெடித்தால்
இடர்களை தவிர்க்க விரும்பின்
உங்களின் சொந்த வீட்டில்
உள்ளே தான் இருத்தல் நன்று !

17.07.1999

கருத்துகள் இல்லை: