வேலின் விழி ஒளியில்- முகம்
காலும் மதி வெளியில்
கோல மயில் அவளைக்- கண்டு
கூடி மகிழ்வு கொண்டேன்
சீல வழி அதனில்-பேசும்
செல்ல மொழி இனிப்பில்
பாலும் வழி முகத்தில் - அருள்
பார்த்து மகிழ்வடைந்தேன்
வெள்ளைச் சிரிப்பினிலே – முகம்
வெட்கும் அழகினிலே
துள்ளும் இடையழகில்- மனம்
தூங்க மறந்து நின்றேன்
கொல்லும் பிரிவினிலே – பின்னர்
கூடும் குழைவினிலே
செல்லும் நடையழகில் - பல
சேதிகள் கண்டுகொண்டேன்!
கி.குருபரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக