செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

நானும் இராமன்தான்!

வில்வளைக்கும் துணிவு இல்லை விண்கூவ ஏழ்மரத்தை
சல்லரிக்கும் திறனுமில்லை- தந்தைக்காக
வெல்லலில்லா இராச்சியத்தை விட்டுவிட்டு மக்களினைப்
புல்லரிக்க வைத்தடவி புகுவதற்கு விருப்பம் இல்லை!

ஈர்ப்புக் குணம் எதுவுமில்லை இடர்தாங்கும் இதயமில்லை
சூர்ப்பனகை கேட்டுவரின் துரத்திவிடும் மனதுமில்லை
நேர்த்திறத்து ஐhனகியும் நினைவினிலே இருப்பதில்லை
போர்க்களத்தில் ஊராண்மை புரிவதுவா, அதுவுமில்லை!

வால்வளர்ந்த குரங்குகளை வாகான தம்பிகளாய்
கோல் கொடுத்தாட்சி கொடுத்ததுவா? இல்லையில்லை!
நூல்பலவும் படித்தெழுந்த நுண்மையினைக் கண்டதில்லை
சால்புடையதெதுவுமில்லை, தன்மானங் கூடவில்லை!

இத்தனையும் பெற்றிருந்தும் இட்டமுடன் இட்டிருன்னும்
அத்தனையும் சேர்ப்பதுடன் அறுசுவையின் பலவகையும்
மெத்தமெத்த உண்பதற்கு மினக்கெட்ட தன்மையினால்
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சாப்பாட்டில் ராமன்தான்!

வாயுபுத்திரன்

1 கருத்து:

ஆட்காட்டி சொன்னது…

ரொம்ப சந்தோசம்.
இன்னமும் பழைய பழக்கம் போகலையா?