சனி, 30 ஆகஸ்ட், 2008

எதிர்ப் பின்னூட்டல்

பனிபெய்ய மழைகொட்டப்
பசும் புற்கள் தலைகாட்ட
கனியொன்று கதைகொள்ளக்
கரம் பற்றும் மனம் மெல்ல

குடைநிழலே கொதியேற்றக்
கொடுவெய்யில் குளிரேற்றப்
படைகொண்ட விழிகொல்ல
பதைப்போடு இவன் செல்ல

படியென் மதிசொல்ல
படு என்று மனம் சொல்ல
துடி என்று அவள் வெல்ல
துடிக்கின்ற இமைதுள்ள

முகம் மீது நகை செய்யும்
முதலான பழம் கொய்யும்
அகம் மீது அன்பூறும்
அதனாலென் உயிர்வாழும்.

2 கருத்துகள்:

Kavi Muthu சொன்னது…

really good sir
if u try to cine field
u get a beautyful life

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

Immmm
Thanks for comments.
But I'm not interested in the Cine field