நீல ஒளியின் விழிகள்
நிலவை பகைக்கும் வதனம்
காலில் கொஞ்சும் சலங்கை
கையில் காப்பு விளங்க
தேனாய் சொட்டும் குரலில்
தேகம் சிலிர்க்க வைக்க
மானாய் துள்ளி அவளும்
மறைவை விட்டு வந்தாள்
காதில் தோடு தொங்க
கழுத்தால் பொன்னும் மங்க
கோதை மெல்ல வந்து
கோர்த்தாள் கையை நின்று
அசையும் இடையின் அதிர்வில்
அழகு துள்ளி ஆடும்
இசையும் மார்பின் இடையில்
இதயம் சுரங்கள் பாடும்
பார்த்த பொழுது கண்கள்
பறித்துக் கொண்ட பெண்ணின்
ஈர்ப்பால் கொஞ்சம் என்னை
இழந்து விட்டேன் உண்மை !
வெட்டும் பார்வை வீச்சு
விசையால் மனதே போச்சு
சுட்டும் விரலை ஆட்ட
சுழலும் உலகம் மேற்கே
பஞ்சு அடிகள் வைத்து
பாதம் தரையில் முட்டி
வந்தாள் எனவே தேவ
மங்கை இல்லை என்றேன்
கிட்ட நெருங்கி நின்று
கொடுத்தால் முத்தம் ஒன்று
கட்டில் உருண்டு விழுந்தேன்
கனவு கலைந்து போச்சே !
சஞ்சீவி யாழ்ப்பாணம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக