புதன், 30 ஏப்ரல், 2008

இரவல் கனவு

நீல ஒளியின் விழிகள்

நிலவை பகைக்கும் வதனம்

காலில் கொஞ்சும் சலங்கை

கையில் காப்பு விளங்க

தேனாய் சொட்டும் குரலில்

தேகம் சிலிர்க்க வைக்க

மானாய் துள்ளி அவளும்

மறைவை விட்டு வந்தாள்

காதில் தோடு தொங்க

கழுத்தால் பொன்னும் மங்க

கோதை மெல்ல வந்து

கோர்த்தாள் கையை நின்று

அசையும் இடையின் அதிர்வில்

அழகு துள்ளி ஆடும்

இசையும் மார்பின் இடையில்

இதயம் சுரங்கள் பாடும்

பார்த்த பொழுது கண்கள்

பறித்துக் கொண்ட பெண்ணின்

ஈர்ப்பால் கொஞ்சம் என்னை

இழந்து விட்டேன் உண்மை !

வெட்டும் பார்வை வீச்சு

விசையால் மனதே போச்சு

சுட்டும் விரலை ஆட்ட

சுழலும் உலகம் மேற்கே

பஞ்சு அடிகள் வைத்து

பாதம் தரையில் முட்டி

வந்தாள் எனவே தேவ

மங்கை இல்லை என்றேன்

கிட்ட நெருங்கி நின்று

கொடுத்தால் முத்தம் ஒன்று

கட்டில் உருண்டு விழுந்தேன்

கனவு கலைந்து போச்சே !

சஞ்சீவி யாழ்ப்பாணம் .

கருத்துகள் இல்லை: